Wednesday, September 24, 2008

மனிதாபிமானம்

இடம்: சென்னை
பெயர்: ஹிதேந்திரன்
நாள் : 24.09.2008

நடந்த சம்பவங்கள் அனைவரின் மனத்தையும் உருக்குவதாக இருந்தது.சென்னையில் உள்ள ஒரு மருத்துவத் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் ஹிதேந்திரன்.ஒரு வேளையில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது விபத்தில் அடி பட்டு பின் தலையில் ரத்தத்துடன் அடி பட்டு கிடக்கிறான். அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கையில் கிடைத்தது செய்தி.அடி பட்டதில் அவனது மூளை செயலற்று விட்டதாகவும் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை எனவும்.பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால் நிலைமையை உணர்ந்தவர்களாய் தங்களை தேற்றிக்கொள்கிறார்கள் அது மட்டுமல்ல தன் மகனது உடல் உறுப்புக்களை தானமாக்க முடிவு செய்கின்றனர்.அதன் படி அவனது உடல் உறுப்புக்களை நுரையீரல்,கண்கள்,இதயம் ஒவ்வொன்றையும் தேவைப்படுவோர்க்கு அளிக்க முற்படுகிறார்கள்.

இதில் மற்ற உறுப்புக்களை விட இதயமானது ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் பொருத்தப் பட வேண்டும்.என்ன செய்வது ? கொடுக்கப்பட வேண்டிய மருத்துவமனை உள்ள இடம் 20 கி.மீ தொலைவில்.சாமானிய ஓட்டுனர்களால் போக்குவரத்து நெரிசல் உள்ள சென்னையில் கொண்டு சேர்க்க முடியாத நிலை.அதனால் அவர்கள் காவல் துறையின் உதவியை நாடுகிறார்கள்.உதவி கமிஷ்னர் மனோகரன் அவர்கள் உதவியால் ஒரு துணையாளருடன் போக்குவரத்தை சரி செய்ய ஆம்புலன்ஸ் உடன் செல்வதற்காக பணிக்கப்பட்டனர்.பின்னர் நடந்ததோ வேறு.ஹிமேந்திரனின் இதயத்தை ஒரு குளிர்சாதன்ப்பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு மருத்துவர் வெளியே வர ,அந்த நிலையில் ஆப்புலன்ஸ்க்கும் , காவல் துறையின் வாகனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் காவல் துறையின் வாகனத்தில் ஏறிக்கொள்கிறார்.துரித நேரத்தில் காவல் துறை தாமதிக்காமல் அந்த வாகனத்திலேயே செல்ல ஓட்டுனரை பணிக்கிறார்.ஓட்டுனரும் தன் நிலையை கருத்தில் கொள்ளாமல் ஒரு வழிப்பாதையும் கடந்து சென்று மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சென்று சேர்க்கிறார்.6 மணி நேர போரட்டத்திற்க்கு பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்பொழுது ஹிமேந்திரனின் இதயம் ஒரு 9 வயது சிறுமிக்குள் உயிராய்...

ஹிமேந்திரன் என்ற சொல்லுக்கு " இதயத்தை கொள்ளை கொள்பவன் " என்று பொருளாம்.

நன்றிகள் அவர்களின் பெற்றோருக்கும்,காவல் துறைக்கும்.

Wednesday, August 6, 2008

ராஜா ராஜாதான்

இசையை உருவாக்க இசையமைப்பாளர்கள் முயல்கிறார்கள்.தானாக வருவதுதான் இசை.நான் பொதுவாக இசை விழாக்களில் கலந்து கொள்வது இல்லை.கதை பிடித்தால்தான் இசை அமைப்பேன்.இந்த திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் தேவை என இயக்குனர் கூறினார்.ஆனால் அவர் கூறிய கதையில் எட்டு இடங்களில் பாடல்களை சேர்க்கலாம் என தோன்றியது.அதற்காக ஒரு மணி நேரத்தில் எட்டு மெட்டுகளையும் போட்டுக்கொடுத்தேன்.இது தானாக அமைவதுதான்.நானாக ஒரு மணி நேரத்தில் எட்டு பாடல்களையும் உருவாக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறேன்.எப்படி மெட்டு அமைக்கிறேன் என்பதை பேட்டிகளில் கூறுகிறார்கள்.அனைத்து இசையமைப்பாளர்களும் இசையை அமைக்க முயல்கிறார்கள்.ஆனால் நான் இசையை உருவாக்குவதில்லை.அது தானாக எனக்குள் நுழைகிறது.பறவை பறப்பது போல கம்ப்யூட்டரில் வரையலாம்.ஆனால் நிஜமாக பறவை பறந்தால் எப்படி இருக்கும்? அது போலதான் இதுவும்.

"மல்லப்பூவ்வூ" பட கேசட் வெளியீட்டு விழாவில் இசைஞானியின் உரை.


Friday, July 18, 2008

ஆவிகள் உலகம்

எல்லார்க்கும் இருக்குற ஒரு பொதுவான கேள்விதான்.நம்ம எல்லாம் செத்ததுக்கு அப்புறம் எங்க போறோம்? இதுக்கு ஒவ்வொரு மதத்திலேயும் ஒரு நம்பிக்கையை அடிப்படையா வச்சு சொல்றாங்க.இறந்த பிறகு இன்னொரு உலகம் இருக்கு.அங்க நமக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்,அதுவும் நம்ம இந்த உலகத்துல செஞ்ச நன்மை தீமைகளை பொறுத்து அப்படினு.

அமெரிக்க நாட்டுல இத பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.ஒரு இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதரை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து விளைவை பார்க்கும்பொழுது அவருடைய ஆத்மா கண்ணாடி பெட்டியின் ஓரத்தில் ஒரு விரிசலோடு சென்றிருக்கிறது.அந்த ஆத்மா மனித உடலின் எந்த பாகத்தின் வழியாக போகிறது என்ற கேள்விக்கு நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நம்முடைய உச்சந்தலையில் உள்ள ஒரு சிறு பள்ளத்தின் வழியாக என்று விடை கிடைக்கிறது.

ஆராய்ச்சி முடிவானது சில ருசிகரமான தகவல்களையும் தருகிறது.இறந்த ஆத்மாக்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பின் ஆவியாக உருவெடுத்து நிறைவேற்றிக்கொள்கின்றது .அதிலும் நல்ல ஆத்மா,தீமை ஆத்மானு இரண்டு பிரிவுகளாம்.ஆவிகள் உல‌கினை பற்றிய ஆராய்ச்சியை கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.அதில் ஆவிகளுக்கும் மாந்த்ரீகர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டெனவும்,அவர்கள் செய்யும் சில விசேஷ பிராத்தனைகள் மூலம் குடும்ப பிளவு,குடும்ப இணைப்பு,செயலிழக்கசெய்வது போன்றவற்றை வெகு சுலபமாக செய்யலாம் என்பதை காட்டினார்கள்.இதனை ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்ளவே செய்தனர்.

ஆக கடவுள் இருக்கிறார்னு சொல்றவங்க இந்த ஆவி உலகத்தயும் ஒத்துக்குறாங்க.முடிவாக‌ யாருக்கும் கெடுத‌ல் செய்யாம‌லும்,நல்ல‌ க‌ட‌வுள் ப‌க்தியும் ,வளமான யோகா ப‌யிற்சியும் இருக்கும் ஒருவ‌னை எந்த ஒரு தீய‌ ச‌க்தியும் தொட‌ இய‌லாது என்ப‌து என் க‌ருத்து.(ஆவிக‌ள்‌ ப‌த்தி ந‌ம‌க்கு தெரிஞ்ச‌த‌ எழுதுனா "அட‌ பாவி" ங்குறானுங்க‌!)

Wednesday, June 25, 2008

பீனிக்ஸ் விண்கலம்

பீனிக்ஸ் என்ப‌து செவ்வாய் கோள் ப‌ற்றி ஆய்வுக‌ள் மேற்கொள்வ‌த‌ற்காக‌ விண்ணுக்கு ஏவ‌ப்ப‌ட்ட‌ ஒரு ஆள் இல்லாத‌ விண்க‌ல‌ம்.செவ்வாய் ப‌ற்றிய ஆய்வுக‌ள் ந‌ட‌த்த‌ தேவையான பல‌ க‌ருவிக‌ள் இதில் உள்ள‌ன‌.இத‌னுடைய‌ நோக்க‌ம் என்ன‌வெனில் அங்கு உயிரின‌ங்க‌ள் எதாவ‌து வாழ‌ முடியுமா?அங்குள்ள‌ நீரின் த‌ன்மை,ம‌ண்ணின் த‌ன்மை இவ‌ற்றை அறிய‌வே.

இந்த‌ விண்க‌ல‌மான‌து நாசா ஆய்வு மைய‌த்தின் ஆத‌ர‌வுட‌ன் அரிசோனா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் மூல‌ம் ஆக‌ஸ்ட் 4,2007 ம் வ‌ருட‌ம் அனுப்ப‌ப்ப‌ட்ட‌து.இது "புளோரிடா" மாகாண‌த்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்ப‌ட்ட‌து.இது ஐக்கிய‌ அமெரிக்கா,க‌ன‌டா,சுவிட்ச‌ர்லாந்து,ம‌ற்றும் ஜெர்ம‌னி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளின் கூட்டு முய‌ற்சி ஆகும்.செவ்வாயில் உறைப‌னி அதிக‌ம் உள்ள‌ இட‌த்திலிருந்து ம‌ண்ணைத்தோண்டி அத‌னை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை உட‌னுக்குட‌ன் அனுப்பும்.க‌டைசியாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌லின்ப‌டி செவ்வாயில் ப‌னிக்க‌ட்டி இருப்ப‌து உறுதியாயிருக்கிற‌து.இத‌ன் எடை 350 கி.கி,பூமியிலிருந்து செவ்வாயில் இற‌ங்க‌ எடித்துக்கொள்ளும் கால‌ம் 92.46 நாட்க‌ள்.


Tuesday, June 24, 2008

சுனாமி!

ஜப்பானிய மொழியில் சுனாமி எனப்படுவதற்கு துறைமுகமும்,பேரலையயும் சேர்த்து அர்த்தம் கூறுகிறார்கள்.ஒரு சில நிமிடத்திலிருந்து சில நாட்கள் வரை ராட்சச அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்த "சுனாமி".

சுனாமி எப்படி உருவாகின்றது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூகோளத்தில் ஒரு Plate இருந்ததாகவும் பூமியானது அதன் மேல் தாங்கப்பட்டதாகவும் பின் பல்வேறு தட்ப வெப்ப சூழல்களில் கண்டங்கள் பிரிய பிரிய இந்த Plate களும் பிரியத்தொடங்கின,நிலப்பரப்புகளும்,கடல்களையும் இத்தட்டுக்களே தாங்கி நிற்கின்றன புவியியல் நிபுணர்கள் ஆய்ந்துள்ளனர்.

கடலாழத்தில் ஏற்படும் பாதிப்புகளினாலும்,கடலாழ பூகம்பத்தினாலும்,கடலை ஒட்டிய நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பத்தினாலும்,எரிமலையினாலும்,கிரகங்களின் செயல்பாடுகளினாலும்,கடலின் அடியில் ஏற்படும் பெளதிக மாற்றத்தினாலும் வருகின்றது.ஆராய்ச்சியாளர்களின் கூற்று சரியாயின் முதன் முதலில் கி.மி.365 ம் நூற்றாண்டில் ஜூலை 21ம் தேதி எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் தோன்றியுள்ளது.

சமீப நூற்றாண்டை கண்க்கிட்டு பார்த்தால் 1755 ல் போர்ச்சுகலில் லிஸ்பனில் நவம்பர் 11 லும்,1883 ஜாவா சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் தீவு.அமெரிக்காதான் முதன்முதலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.இந்த அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை கருவிகள் வழியாக ,கருவிகள் நீரழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி செயற்கைகோளுக்கு அனுப்பி அதிலிருந்து பெறப்படும் தரைவழி தகவல்களை தன் உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்புகிறது.

என்னுடைய முந்தைய பகிர்தலில் கடவுள் யார்? கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி தேவையா இல்லையா? என சில பகுதிகள் இருந்தது.ஆனால் இப்பகிர்தல் அதற்கு எதிர்மறையான எண்ண ஓட்டத்தை மனதில் ஏற்படுத்தியது.கடவுள் கடவுள்னு சொல்றோமே அப்படினா அவர் ஏன் இப்படிப்பட்ட பேரலைகளை தடுத்திருக்க கூடாது?எவ்வளவு உயிர் சேதம்?எத்துணை சிறு குழந்தைகள்!ஒரு வேளை இதை விட ஒரு பேரழிவை தடுப்பதற்காக சுனாமி வந்ததாகக்கொண்டாலும்.சுனாமியால் இறந்த ஆத்மாக்களுக்கு பதில்???

சுனாமியில் இறந்த ஆத்மாக்களுக்கு என்னுடைய சமர்ப்பணம்.

Friday, June 20, 2008

தெரியல‌யே!!


நீயும் நானும் சொந்த‌மில்லை
பேசிக்கொண்ட‌தில்லை
க‌டிதப்‌ ப‌ரிமாற்ற‌மும் இருந்த‌தில்லை
இருந்தாலும் பிடிக்கிற‌தே!!!
த‌லைப்பு காத‌ல்னு வைப்போமா? காம‌ம்னு வைப்போமா?

Saturday, June 7, 2008

என் அறிவியல் ஆசிரியருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள திரு.அற்புதராஜ் ஐயா அவர்களுக்கு

நான் தங்களிடம் ஏழாம் வகுப்பு பயின்றேன்.தங்களுடைய அறிவியல் பாட வகுப்பில் ஒரு முறை தாங்கள் ஒரு 1/2 குயர் நோட்டு வரைபடத்திற்காக போடச்சொன்னீர்கள்.ஆனால் நான் ஒரு குயர் நோட்டு போட்டு அன்றைக்கு இரவு முழுதும் கண் விழித்து வரைந்து அடுத்த நாள் தங்களிடம் நீட்ட நீங்களோ என் முகத்தில் விட்டெறிந்தீர்கள்.அப்புறம் சில பல உதைகள்.ஏன் என்று தெரியவில்லை.ஓரு வேளை எனது தந்தையும் அதே பள்ளியில் வேலை பார்த்த‌தாலோ என்னவோ உங்க அப்பா இருக்குறாருங்குற திமிரானு கேட்டு அடிச்சிங்க.இறுத்தேர்வு முடியும் வரை என்னிடம் பாடம் சம்மந்தமாக எந்த கேள்விகளையும் கேட்கவில்லை.காலப்போக்கில் நான் ஒவ்வொரு வகுப்பாக மாறும்போதும் எப்பொழுது உங்களை பார்த்தாலும் வணக்கம் செலுத்துவேன்.ஆனால் தாங்கள் ஒரு சிறு புன்னகையை கூட விட்டு சென்றதில்லை.இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்களை தெப்பக்குள வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது சந்திக்க நேர்தது."சரி இன்னைக்காவது சார் சிரிப்பாரு"என்ற என் அர்ப்ப ஆசையயும் பொய்யாக்கிவிட்டு சென்றீர்கள் என் வணக்கத்திற்கு பின்.

தொடரும் சார் என் வணக்கம்.

நன்றி.


தங்களின் கீழ்படிந்த மாணவன்
ரூபன்.L


பிக்ஸர் ரீசைஸர்(Picture Resizer)

நம்ம கேமராவிலோ அல்லது செல்போனிலோ எடுக்கும் புகைப்படங்களை இணையத்திலிருந்து மற்றவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்பொழுது அதன் அளவை குறைப்பதற்காக பல வசதிகளுடன் இணையத்தில் உள்ள ஒரு சாப்ட்வேரை பற்றிய பகிர்தல் இது.

இத‌ற்கு Picture Resizeர்னு ஒரு சாப்ட்வேர் இணைய‌த்துல‌ இல‌வ‌ச‌மா கிடைக்குது.அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம் இதுல‌ இருக்குனு பார்த்தா ,உதார‌ண‌த்துக்கு ஒரு file "JPEG" format ல‌ இருக்குன்னா அத‌னை "GIF" format ற்கோ அல்ல‌து "BMP" format க்கோ எளிதாக‌ மாற்ற‌ முடியும்.அந்த‌ மாதிரி ம‌ற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌த்தை வேறொரு புதிய‌ folder ல‌ Save ப‌ண்ண‌ முடியும்.ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளையும் ஒரே நேர‌த்துல‌ மாற்ற‌ முடியும்.டிஜிட்ட‌ல் போட்டோகிராப‌ர்க‌ளுக்கு இந்த‌ சாப்ட்வேர் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌து.


இத‌னை
http://bluefive.pair.com/pixresizer.htm மூல‌ம் பெற‌லாம்.

Wednesday, June 4, 2008

தமிழ் வழி கல்வி தேவையா?

இந்த கேள்வி எல்லாருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான்.கொஞ்சம் ஆழமா சிந்தித்து பார்த்தால் இந்த கேள்விக்கான விடை ஒரு கேள்விக்குறியாவேதான் இருக்கும்.சமீபத்துல ஒரு தனியார் தொலைகாட்சியில இதை பற்றின விவாதம் நடந்த பொழுது என் மனதில் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிப்பு.

இரு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை எடுத்துக்கொள்வோம்,ஒருவன் தமிழ் வழிக்கல்வி,மற்றொருவன் ஆங்கிலவழிக்கல்வி,கல்வி ங்குறது எதுக்கு?பாட புத்தகம் குறது எதுக்கு?அவனுடைய அறிவ பெருக்க,நாலு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்க,விஞ்ஞானத்த பத்தி தெரிய.........இப்படி அ அ அ அ அ அ னு சொல்லிட்டே போகலாம்.கொஞ்சம் நடைமுறைக்கு வந்து பார்போம்.தமிழ் வழி பயின்றவன் சுட்டெலி(Mouse),விசை பலகை(Keyboard),வட்டம்,செவ்வகம்,முக்கோணம்,இருசமபக்க முக்கோணம்,உருளை,வகைக்கெழு(Differenciate),கோடிட்ட இடங்களை நிரப்புக( Fill in the blanks).பொருத்துக(Match the following).இதுவே இப்படினா அறிவியல் பாடத்த எடுத்துகிட்டா எவ்வளவு வரையறைகள்.சூத்திரங்கள்?சரிங்க இதெல்லாம் படிச்சுட்டு பொதுத்தேர்வுலயும் 1000 க்கு மேல வாங்கிட்டான்.கல்லூரிக்குள்ள கால எடுத்து வைக்கிறான்.ஒரு துறை ஆசிரியர் இந்த மாணவன "Tell me the Newtons third law?"னு கேக்குறாருனு வைங்க.அவன் எந்திரிச்சு"ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" ங்குறான்.அத்தன பேர் மத்தியிலும் அவனோட நிலைமைய கொஞ்சம் யோசிச்சுபாருங்க.அவனே ஒரு பொறியியல் கல்லூரிக்கோ,மருத்துவ கல்லூரிக்கோ போகும்போது அவனோட நிலைம இன்னும் மோசமாதான் இருக்கும்.இதே மாதிரியான சம்பவம் ஒரு ஊர்ல நடந்து ஒரு தமிழ் வழி பயின்றவனுடைய "உயிரை"எடுத்துருக்குனா அப்ப அந்த கல்வியினுடைய நோக்கம் என்ன? அந்த மாணவன் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்? அப்படினா தமிழ் வழி பயின்றவர்கள் எல்லாம் வெற்றி பெறலயா?அவன் ஒரு கோழையா?இதெல்லாம் வேண்டாம்.கல்வி ஒருவன் வாழ்வதற்கே தவிர வீழ்வதற்கு அல்ல!

மற்ற நாட்டுல எல்லாம் அவன் கணிதத்தையோ,விஞ்ஞானத்தினையோ அவர்களுடைய தாய் மொழியிலயே படிக்கிறாங்க.ஆனா இங்க நடக்குறது என்ன? இந்த மாதிரி தற்கொலை பண்ணிக்கிறவங்களும்,அதற்கு முயற்சி எடுக்குறவங்களும் இந்த நாட்டுல எவ்வளவோ பேர் இருக்காங்க.பாடத்திட்டம் எல்லாம் ஒன்னுதான்னா ஏன் ரெண்டு வழிக்கல்வி? ஆங்கில வழிக்கல்விக்கு இருக்குற முன்னேற்றப்பாதை ஏன் தமிழ் வழிக்கு இல்ல?ஏன் இந்த அரசாங்கம் தமிழ் வழி படிப்பிற்கான முற்போக்கு திட்டம் எதயும் அமுல்படுத்தல?M.A Tamil ல் படித்த ஒருவன் 50000 சம்பளம் வாங்க முடியுமா?முடியும்னா அதற்கான புதிய கல்வி அமைப்பையும்,கல்வி திட்டத்தையும்,வேலை வாய்ப்பையும் இந்த அரசு தருமா?

தீர்வு: இந்த‌ கால‌த்துல‌ எதுவும் நிறைவேறாது.த‌மிழ் த‌மிழ்னு முழ‌க்க‌மிடும் எத்த‌னை த‌லைவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் English Convent ல‌ ப‌டிக்கிறாங்க‌.இந்த‌ மாதிரியான‌ விவா‌த‌ங்க‌ளை தொலைக்காட்சியிலும் ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளிலும் அல‌சி அல‌சி அவ‌ங்க‌ளோட‌ Rating க‌ உய‌ர்த்திக்கிறாங்க.அவ்வளவு ஏன் ஒருத்த‌ர் ப‌ட‌த்தையே எடுத்து பாத்துட்டாரு.ஓட‌ல‌யே?இதுக்கு என்ன‌ சொல்றது? இந்த‌ Blog அ முடித்த‌வுட‌னே என‌க்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதுல‌"What were u doing Rueban?Why you are wasting your timings with the funny things?"எங்க‌ மேனேஜர் ஆங்கிலத்துல‌.அட‌ ஆண்ட‌வா!!!!!!!!!!



Tuesday, June 3, 2008

கணிணி பற்றிய சில தகவல்கள்

சில சமயம் நம்ம இணையத்துல இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யப்படும் சாப்ட்வேர்களில் சிலவற்றை எளிதாக அழிக்க முடியாது.சாதாரணமாக "control panel" ல"add and remove programs" போய் அழிப்போம் இல்லையா?அப்படியும் அழிக்க முடியாத சில சாப்ட்வேர்களை ஒரு சில "Third Party Softwares" மூலமாதான் அழிக்க முடியும்.ஏன் அத அழிக்க முடியலனா NTFS file system ல அதற்கு அனுமதி இல்லை. Administrator இல்லனா அது தொடர்பான group ல login ல‌ இருந்துதான் அத செய்ய முடியும்.

இப்ப‌டி செய்தும் நீக்க‌ முடிய‌ல‌னா unlocker போன்ற‌ சாப்ட்வேர்க‌ள் மூல‌மா இந்த‌ சிக்க‌ல‌ ச‌ரி செய்ய‌லாம்.200kb அள‌வு கொண்ட‌ இந்த‌ சாப்ட்வேரை"
http://ccollomb.free.fr/unlocker/" என்ற‌ இணைய‌த‌ள‌த்துல‌ இருந்து பெற‌லாம்.ட‌வுன்லோட் செய்து இன்ஸ்டாலுக்கு பின் குறிப்பிட்ட‌ folder ஐ தேர்வு செய்து Right click செய்து எளிதாக‌ நீக்க‌லாம்.

தியாகம்


என் உறவென்னை வெறுக்க‌
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்றும் நீ மட்டுமே உறுதி தந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய் தியாகச்சுடரே!

Wednesday, May 28, 2008

சீனப்பெருஞ்சுவர்

அப்படினா என்ன? அது எங்க இருக்கு?அதோட சிறப்பு அம்சம் என்னனு பார்போம்.மூன்றாம் நூற்றாண்டுல மங்கோலியாவிலிருந்தும்,மஞ்சூரியாவிலிருந்தும் வந்த "காட்டுமிராண்டி"படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சீன பேரரசால் கட்டப்பட்ட ஒரு தடுப்பு அரண் தான் இந்த பெருஞ்சுவர்.இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழையாம இருக்குறதுக்காக இல்ல.அவர்களுடைய குதிரைகள் நுழையாமல் இருப்பதற்காகவே!

இப்ப நாம பார்க்குற மாதிரி சுவர் ஒரே நேரத்துல கட்டப்படல.வெவ்வேறான கால கட்டத்துலயும்,சூழ்நிலையிலயும்தான் கட்டப்பட்டது.பழைய கின் வம்சம்,மிங் வம்சம்னு நிறைய இருக்கு,அதுல கடைசியா மிங் வம்சத்துலதான் இதனோட கட்டமைப்பு இப்ப நாம பார்க்குற வடிவமைப்புல இருக்கு.இந்த கட்டமைப்பு நடந்த வேளைல நிறைய ஊழியர்கள் எதிரிகளின் தாக்குதலால் தங்களோட உயிர விட்ருக்காங்க,அதனால இது உலகின் "அதி நீளமான மயானம்"னு அழைக்கப்படுது.

இதோட சிறப்பு என்னனா?1987 ல யுனஸ்கோ வால "உலகின் மிக சிறந்த பாரம்பரியங்களில் ஒன்றாக "அறிவிப்பு கொடுத்தத சொல்லலாம்.சந்திரனில் இருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு இது.உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக இப்ப இருக்கு.

கொசுறு:நம்ம பாட புத்தகத்துல எல்லாம் நிலாவுல இருந்து பாத்தா பெரிய சுவர் அப்படியே தெரியும் பாரு !அப்படி சொல்வோம்ல.அதுக்கு ஆப்பு வைக்குறதுக்காக பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி இப்ப சீனாவுல எல்லா பாட புத்தகத்துல இருந்தும் இத பத்தின செய்திய எடுத்துட்டாங்க.

Tuesday, May 20, 2008

கடவுள் யார்?


இந்த கேள்வியானது மனிதனாக பிறந்த ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வாழ்க்கைல ஒரு நிமிஷத்துலயாவது யோசிச்சிருப்பான்.இந்த உலகம் எப்படி வந்தது?மனிதர்கள் எப்படி வந்தாங்க?அவங்களுக்குள்ள ஆசைகள்,இன்பங்கள்,துன்பங்கள்,வேதனைகள் எப்படி வருகின்றன?யார் இதெல்லாம் உருவாக்கினது?கடவுள்னு ஒருத்தரே இல்லனா எப்படி கோயில்களும்,ஆலயங்களும்,மசூதிகளும்,மதங்களும் எப்படி வந்தது?மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு கொலைகளும்,போராட்டங்களும் நடக்குது?இப்படி கேள்விகள் கேட்டுட்டே போகலாம்.

இதற்கான விடைய ஒரு சின்ன கதையின் மூலம் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்(சின்ன வகுப்புல மறைக்கல்வி ஆசிரியர் சொன்னது).கதையின் நாயகன் நாம மேலே சொன்ன மாதிரி ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவார்.கடவுள்னா யாரு?நம்ம முன்னோர்கள் யார்?ஆதாம்,ஏவாள்னா யாரு அப்படினு ஒரு கடற்கரை ஓரமா உட்கார்ந்து யோசிச்சுட்டே இருக்காரு.அந்த சமயத்துல ஒரு பத்து அடி தூரத்துல ஒரு சின்ன பையன் கடற்கரை மண்ணுல ஒரு சின்ன குழிய தோண்டி அதுல கடல் தண்ணிய கையில் எடுத்துட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா நிரப்பிட்டு இருந்தான்.ரொம்ப நேரமா இது மாதிரி பண்ணிட்டுருந்ததால அந்த மனிதன் ,சிறுவனிடம் ,ஏன் இப்படி நிரப்புரனு கேக்குறார்.அதுக்கு அந்த பையன் ,இங்க இருக்குற எல்லா தண்ணியயும் இந்த குழிழ நிரப்ப போரேனு சொன்னான்.உடனே மனிதன் சிரிச்சுக்கிடே ,அது எப்படி தம்பி முடியும்? கடல் எவ்வளவு பெரிசு? அத எப்படி உன்னால இந்த சின்ன குழிக்குள்ள நிரப்ப முடியும்னு கேட்டார்.அதுக்கு அந்த பையன் சிரிச்சுட்டே "நீங்க உங்க மனசுல ஓடிட்டிருக்கிற வினாவுக்கு விடை தெரியரதுக்குள்ள நான் கடல் தண்ணிய குழிக்குள்ள நிரப்பிடுவேன்"னு சொன்னான்.அப்பதான் நம்ம நாயகனுக்கு புரிய ஆரம்பித்தது.

முடிவு: கடவுள் பற்றிய ஆராய்ச்சி அர்த்தமற்றது.நம்ப வேண்டும் இருக்கார்னு.






Monday, May 19, 2008

பெர்முடா முக்கோணம்

இன்றைக்கு ஒரு பொதுவான விடை தெரியாத கேள்விய பத்தி கொஞ்சம் பார்ப்போம்.
வட அட்லாண்டிக் பெருங்கடல் ல பெர்முடா,மியாமி,பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும்.இதுல என்ன விசேஷம்னுதான கேக்குரிங்க?.இருக்குங்க.இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில அமைஞ்சுருக்குறதுதான்.அப்படி என்ன இருக்கு இதுல? ஆம்!இந்த முக்கோண பரப்பிற்கு உள்ள வர எந்த ஒரு பொருளையும் இது தனக்குள்ள இழுத்துக்குமாம்.பல ஆய்வுகளின் அடிப்படைல இதுவரை 40 கப்பல்களையும்,20 விமானங்களையும்,சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்துருக்கு.

இதுல 1872 ம் ஆண்டுல மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல் தான் இதுல பதிவான முதல் பதிப்பு.ஏன் இப்படி நடக்குதுனு நிறைய ஆராய்ச்சிகளும்,விளக்கவுரைகளும் பல விஞ்ஞானிகள்ட இருந்து கிடைச்சுருக்கு.அதுல வாலன்டைன்னு ஒருத்தர் இந்த மாதிரி காணாமல் போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன.ஆனால் வேறு பரிமாணத்துல இருக்குனு சொல்லிருக்கார்.அமெரிக்க நாட்டு ஜோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்துனாலதான் நடக்குதுனு சொல்லிருக்கார்.திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும்னும் சொல்றார்.

அதே மாதிரி படிகங்கள்ல இருந்து வர ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும் விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.சரி இதோட முடிஞ்சதுனு பார்த்தா இன்னொன்றும் இருக்குங்க.பெர்முடா முக்கோணப்பகுதியின் நேர்புரம் ஜப்பான் நாட்டு தென்கிழக்கு கடற்பகுதில"பிசாசு கடல்"னு ஒன்னு இருக்காம்.அங்கும் இம்மாதிரியான ஜீபூம்பாக்கள் நிறைய நடந்துருக்கு.இங்க காந்த முள் மாறுபாடு இயல்புக்கு குறைவாவே இருக்காம்.அதனால இரண்டுக்கும் பொதுவான தொடர்பும் காரணமும் இருக்குஙாங்க.

அண்மை கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருள்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும்,திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான் வடிவத்துல இருக்குனு முடிவா சொல்றாங்க.இந்த எலக்ட்ரான்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல் பட வைத்தால்,அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக செய்தால்,அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும்னு முடிவிற்கு வந்துருக்காங்க.இந்த செயல் முறைக்கு "எதிர் மறை செயல் திறன்" பெயரும் வைத்திருக்கிறார்கள்.இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.

உபயம்: கூகுள் இணையதளம்.

என்னங்க ஓரளவுக்காவது புரியுதா?

Monday, April 28, 2008

படித்ததில் பிடித்தது

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,எப்படியாவது கிடைச்சுரனும்னு.அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது.இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான்.உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது,இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான்.உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது.இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும்.இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது.மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன்,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்"எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது.மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

Wednesday, April 23, 2008

கேள்விக்குறிகள் ஏராளம்:

எல்லாத்துக்கும் இருக்குற ஒரு கையளவு இதயத்த பத்தியும் ,அதுக்குள்ள தினந்தொறும் நடந்துட்டுருக்கிற போராட்டங்கள பத்தியுமான பகிர்தல் இது.
புதிதாய் பிறந்த குழந்தைக்கு : ஏன் எல்லாம் என்னைய பாத்து சிரிக்கிறாங்க?
பள்ளி வயது சிறுவனுக்கு : சின்ன குழந்தையாவே இருந்திருக்கலாம்!
கல்லூரி செல்லும் மாணவனுக்கு: இந்த வருடமாவது தேறுவோமா?
வேலை தேடுபவனுக்கு : இன்னைக்காவது வேலை கிடைக்குமா?
கணவனுக்கு : மனைவி இன்னைக்காவது அன்பா பேச மாட்டாளா?
மனைவிக்கு : ஒரு நாளாவது என் பேச்சை கேட்க மாட்டீங்களா?
மாமியாருக்கு : பையன் பொண்டாட்டி பேச்ச கேட்ருவானோ?
மருமகளுக்கு : என்னைக்கு என்னைய கொளுத்த போறாங்களோ?
வயதானவர்களுக்கு : பிடித்தம் இல்லாம பென்ஷன் இந்த மாதமாவது கிடைக்குமா?
கடைசியா ,
கடவுளுக்கு : அய்யோ! ஏன்டா இந்த மனித இனத்த படைச்சோம்?
ஒவ்வொருத்தருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை : அவரவரின் "மனசாட்சி".

Monday, April 7, 2008

எனக்கு பிடித்த பாடல்

நீயே எந்தன் தெய்வம்!
நீயின்றி வேறேது சொந்தம்

ஆயிரம் மனிதரில் என்னை தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
கண்னென காத்திட எந்தன் நெஞ்சில் வா வா
கவலை இன்றி நான் வாழ என்னில் எழுந்து வா
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
துணை வரும் அருளினால் என்னை தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா


நீயே எந்தன் தெய்வம் - நீயின்றி வேறேது சொந்தம்!

Monday, March 31, 2008

ராஜாங்கம்!

வேற யாருங்க நம்ம இளையராஜா சார பத்திதான் பேசபோறோம்.எல்லோருக்கும் தெரிந்த இசை மேதைங்க.அவரை பற்றி ஒரு சில தெரியாத விவரங்கள பத்தி கொஞ்சம் பார்ப்போம்.இவர் பிறந்த ஊர் மதுரைக்கு பக்கத்துல "பன்னபுரம்"ங்குற இடம்.இவரோட குரு பாவலர் வரதராஜன்.ரொம்ப சின்ன வயசுலயே இசை மேல அதீத வெறியரா இருந்துருக்கார்.1969 ல தாங்க மெட்ராஸ்(இப்ப சென்னை) வந்துருக்கார்.அப்புறம் "தன்ராஜ்"என்ற ஆசிரியரிடம் பியானோவும்,கிட்டாரும் மேற்கத்திய இசையயும் கற்றார்.

இசை நுட்ப அறிவுக்காக லண்டன் சென்று ட்ரினிடி பல்கலைகழகத்துல சேர்ந்து அதனை முழுதாக கற்றுத் தேர்ந்தார்முதல் படமான " அன்னக்கிளி " 1976 ல வெளி வந்து சக்க போடு போட்டுருக்குங்க.இதுல விசேஷம் என்னனா? முதன் முதலா ஒரு இசையமைப்பாளருக்கு விளம்பரபலகை வைத்த பெருமை இவரையே சாரும்.இந்த படத்துல இன்னொரு சுவாரசியம் என்னனா இவரு தன்னோட முதல் கம்போஸிங்க(அதாங்க இசை கோர்ப்பு) ஆரம்பிக்கிறப்பவே பவர் கட்.எல்லாரும் நினைச்சாங்க எங்க இவன் தேறப் போறான்னு.அன்னக்கி அவர் இத ஒரு தடங்கல்னு நினைச்சுருந்தா???????

அப்புறம் வரிசையா பதினாறு வயதினிலே,பொண்ணு ஊருக்கு புதுசு,கண்ணன் ஒரு கைக்குழந்தை, நெற்றிக்கண், நிழல்கள்,மூடுபனி,ஆறிலிருந்து அறுபதுவரை, நெஞ்சத்தை கிள்ளாதே, கோழிக்கூவுது,இப்படினு சொல்லிட்டே போகலாம். நானூறாவது படமா " நாயகன்",ஐநூறாவது படமா " அஞ்சலி" அமைந்தது. திரை இசைய தவிர " ஆல்பமும்" பன்னிருக்காரு. இத தவிர கர்நாடக சங்கீதத்துல " பஞ்சமுகி" எனும் ராகத்தினை கண்டுபிடிச்சுருக்கார். இசைத்துறைல நுழைந்து 20 வருடத்துல 500 படங்கள தாண்டிட்டார்.

பட்டி தொட்டியெல்லாம் இவரோட இசை சென்றடைய காரணம் மனதை வருடும் மெல்லிசையும், நாட்டுப்புற இசைய்யும் தான். சமீபத்துல கூட வந்த " திருவாசகம் " பற்றி நான் சொல்லிதான் தெரியனுமா? இந்த காலத்துலதான் இசைக்கோர்ப்பு வேலைகள் எல்லாம் ரொம்ப சுலபமா பண்றாங்க.இன்னும் தெளிவா சொன்னா தனித்தனி ட்ராக் காக முடிச்சிடறாங்க.அந்த காலத்துல அப்படி கிடயாது."இளைய நிலா பொழிகிறதே"ங்குற பாடல 17 முறை எடுத்துருக்கார்."காதலுக்கு மரியாதை" படத்தின் அத்தனை பாடல்களும் ஒரே நாள் ல முடிக்கப்பட்டது.

நடிகர் ராமராஜன்னு ஒருத்தர் இருந்தார் இல்லையா? அவருடைய படங்கள் எல்லாம் ஓடியதற்கு நம்ம ராஜா சார் தான் காரணம். நடிகர் மைக் மோகன் தொடர்ந்து 25 வெள்ளி விழா படங்கள கொடுத்துருக்கார்னா அதுக்கும் நம்மதான் காரணம்.இன்னும் நிறைய சொல்லலாம்."பூவே செம்பூவே","கன்ணே கலைமானே","என் வானிலே" இதெல்லாம் கேட்டுட்டு அழாம இருக்க முடியுமா? வாழ்க ராஜா! தொடரட்டும் அவரின் இசை பயணம்.

Thursday, March 27, 2008

நட்பா? காதலா?

என்னங்க தலைப்பே சுவாரசியமாய் இருக்குனு பார்க்குரீங்களா? கண்டிப்பா! இல்லையா பின்ன?மனிதனா பிறந்த ஒவ்வொருவரும் மேலே சொன்ன இரண்டயும் கலந்து வராம இருக்க முடியாது. நான் சின்ன வயசா இருக்கும்போது சொன்ன மாதிரி "பிரபு" வ தவிர வேர யாரும் இல்ல.ஆறாவது படிக்கும்போது எனக்கு "மணிவேல்"னு ஒரு நண்பன் வந்தான்.ஏனோ தெரியல ஒரு வருடம் மட்டுமே நெருக்கமான தோழனா இருந்தான்.ஏழாவதுல தான் "வினோத்,ஜெப்ரி வந்தானுங்க,இப்ப நினைக்கிறப்ப கூட கண்களில் கண்ணீர் வரும்,இவர்களுடன் நான் பெற்ற நட்பு.அந்த அளவுக்கு ஆனந்தமானது.முழு பரீட்சை விடுமுறைல கூட லெட்டர் போட்டுக்குவோம்.( நண்பா இன்னும் அந்த மடல்கள் எல்லாம் பத்திரமா வச்சுருக்கேன்டா).பத்தாவதுல அவன் வேறு ஒரு பள்ளிக்கு போய்ட்டான்.பதினோறாம் வகுப்புல சிவராம் ரொம்ப நல்ல நண்பன்.இப்ப தன்னோட முதுகலை படிப்ப சென்னைல படிக்கிறான்.வினோத் ம் அங்கதான் இருக்கான்.ஜெப்ரி மலேசியாவில் இருக்கிறான்.

எங்க வீட்டு அருகே சின்ன பிள்ளை யா இருக்கும்போதே இருக்குற நண்பர்களை பத்தி சொல்லவே இல்ல பாருங்க."கார்த்தி","முத்துகுமார்".இவங்கள பத்தி சொல்லனும்.கார்த்தி நான் எல்லாம் அப்பைல இருந்தே ஒண்ணாதான் விளையாடுவோம்.அப்ப எனக்கு முத்துவ தெரியாது.இனிமேதான் கூத்தே இருக்கு.ஒரே கல்லூரிலதான் படிச்சோம்.அப்பதான் முத்துவ அறிமுகபடுத்தி வச்சான் கார்த்தி.அப்புறம் நாங்க மூணு பேரும் தான் படத்துக்கு போவோம்.கால ஓட்டத்துல கார்த்திய விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் எல்லா இடத்துக்கும் சுத்த ஆரம்பிச்சுட்டோம்.இப்ப வரைக்கும் நாங்க மூணு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.மலைக்கோட்டைக்கு வாய் இருந்தா கூட அழுவும்.அந்த அளவுக்கு அங்க போய்ருக்கோம்.



கல்லூரில இருக்குற நண்பர்கள் பத்தி சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்களே? எல்லா துறையிலயும் ஆண்,பெண் நண்பர்கள் இருந்தாங்க. நான் ஏன் அப்படி சொல்றேன்னா ஒரு சிலர் தான் இப்ப வரைக்கும் இருக்காங்க. நெருக்கமான தோழனாக ரூபஸ் இருக்குறான்.செந்தமிழ் இன்னொரு தோழியா இருக்குறா.அப்புறம் கலைஞர்,தியாகு,ராவ்,விஜி,கார்த்தி,லால்குடி கார்த்தி,பிரவின்.மற்ற துறைல ராஜா,மாம்ஸ்,கேத்தன்.......இன்னும் நிறைய பேர் இருக்காங்க.இதுல ரூபஸ் இப்ப திருவனந்தபுரத்துல ஒரு தனியார் நிறுவனுத்துல பொறியாளரா இருக்கான்,செந்து சென்னைல ஒரு கல்லூரில விரிவுரையாளரா இருக்கா,முத்துகுமார் சென்னைல ஒரு பன்னாட்டு நிறுவனத்துல இருக்கான்.எங்களுடைய நட்பு அனைவரும் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.

என்னடா நட்ப பத்தியே சொல்லிட்டுருக்கானே காதல பத்தி சொல்லவே இல்லனு நீங்க கேக்குறது புரியுது.இவ்வளவு ஆழமான அருமையான நண்பர்களை பற்றியும் , நட்ப பற்றியும் நினைக்கிறப்ப கிடைக்கின்ற ஆனந்தம் காதல பத்தி எழுதினா கிடைக்காதுனு எனக்கு தோனுது.அதனால தலைப்ப மாத்தாம அதனை பற்றிய பகிர்தலை விடுப்போம்.வரட்டுமா????

Tuesday, March 25, 2008

திருச்சிய பத்தி கொஞ்சம் பார்ப்போமா?









திருச்சி ரொம்ப பெரிய ஊர் இல்லைனாலும் கொஞ்சம் பெரிய ஊர் தான்.சிறப்பான சில இடங்கள்னு பார்த்தா புனித லூர்து அன்னை ஆலயம்,மலைக்கோட்டைஇவற்றை ஒட்டிய ஒரு தர்கா,அப்புறம் வெளில வந்து பாத்தா பாரத மிகு மின் நிலையம், முக்கொம்பு, கல்லணை, மலைக்கோவில், துப்பாக்கி தொழிற்சாலை. இந்த சிறப்பான இடத்துல ஒரு மத நல்லிணக்கமும் ஒளிஞ்சிருக்கு.அது என்ன தெரியுமா? பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரே நேரத்தில் மலைக்கோட்டை,லூர்தன்னை ஆலயம்,தர்கா மூன்றிலும் மணி ஒலிக்கும்.இப்ப சொல்லுங்க திருச்சி சிறப்பா இல்லையா?

சுற்றுலா தலம் கூட இருக்குங்க:

திருச்சில இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் இருக்கு.ஒன்னு "சத்திரம் பேருந்து நிலையம்".இன்னொன்று " மத்திய பேருந்து நிலையம் ".இதுல முதலாவதா "முக்கொம்பு" பத்தி பார்ப்பொம்.சத்திரத்திலிருந்து ஒரு 15 கி.மீ.தொலைவில் இருக்குது இந்த இடம்.ஒரு காலத்துல பள்ளிகள் ல சுற்றுலா கூட்டிட்டு வருவாங்க.இப்ப காதலர்கள் பூங்கா ஆனது கொஞ்சம் உறுத்தலான உண்மை.அடுத்தது கல்லணை.இதுவும் முக்கொம்புவை ஒட்டிய ஒரு தலமாகும்.கரிகால மன்னர் இதனை கட்டினார் என்ற வரலாற்று செய்தியும் உண்டு.புளியஞ்சோலைனு ஒரு இடம் இருக்குங்க.இது திருச்சில இருந்து சுமார் 50 கி.மீ.தொலைவுல இருக்கு.

பார்க்க வேண்டிய இடங்கள்:

மேற்கண்ட கோயில்கள் எல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள் தான்.இது தவிர பூண்டி மாதா பேராலயம், திருவரங்கம், மலைக்கோவில், தெப்பக்குளம் இன்னும் நிறைய இருக்கு.


கல்லூரிகள்:

திருச்சில முக்கியமான கல்லூரி யாக " புனித வளனார் தன்னாட்சி "கல்லூரிய சொல்லலாம்.ஏன்னா?திரு.மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரி இது.இவர் தன்னுடைய இளங்கலையை இங்குதான் பயின்றார்(இயற்பியல்).இது மட்டும் அல்ல மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இங்குதான் இளங்கலையை முடித்தார். இது தவிர நிறைய பொறியாளர்களையும், மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமை இக்கல்லூரியையே சேரும்.



வாழ்க்கையை மாற்றிய 10,11,12 !!!!!!!!!

அப்படியே ஊர சுத்தி வந்துட்டு இருந்த காலத்துக்கப்புறம் வந்தது பத்தாவது வகுப்பு. என் இன்னொரு அத்தை வீட்டிற்கு படிப்பதற்காக ஒன்பதாவது வகுப்பு விடுமுறை நாட்களிலேயே அனுப்பப்பட்டேன் . ஒரு மாதிரி வேண்டா வெறுப்பாதான் போனேன். கணிதமும், அறிவியலும் சொல்லிகொடுக்கப்பட்டன. எனக்கு அப்பதான் இதுதான் கணிதம்னு அப்பதான் தெரிந்தது. நிறைய அடிகள் மற்றும் கொட்டுகள் வாங்கி ஓரளவு கற்றுக்கொண்டிருந்தேன். அறிவியல் புத்தகம் எல்லாம் தண்ணி பட்ட பாடு எனக்கு. பின்ன முதல் அட்டைல இருந்து கடைசி அட்டை வரைக்கும் படிச்சா?

படிப்படியா பத்துல இருந்து முன்னேறி 5, 4, 3, 2, கடைசில 1 ம் வாங்கினேன். அப்பொழுது தெரிந்தது வாங்கிய கொட்டுகளின் இன்பம்!!! (அத்தைக்கு நன்றி). கடைசியா பொது தேர்வுல 460 மதிப்பெண்கள். இதுல அறிவியல்ல நூத்துக்கு நூறு வேற!!!!!! (அய்யோ அய்யோ). இந்த மாதிரி கலக்கிட்டுருந்தாலும் கலையையும் விடல. அதுலயும் கலக்குதான். அப்பதான் பள்ளில ரூபன்னா யார்னு தெரிய வந்தது. இதே கலக்கல்கள் தொடந்தது பன்னிரண்டாவது வரை!!!!!!! எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே மாதிரி" "எல்லா புகழும் என் அத்தை ஒருவருக்கே" என்று சொன்னால் அது மிகை ஆகுமா? ஆகாதா நீங்களே சொல்லுங்க?

இதே கலக்கல்கள் தொடரும்னு நினைச்சுட்டுதான் கல்லூரி படிப்புக்கு போனேன். ஆனால் அங்கயும் கலையிலதான் ஜெயிக்க முடிந்தது. பரவாயில்லை ரகம்னு சொல்லலாம்னு வச்சுக்கோங்களேன்.

Thursday, March 20, 2008

ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!


ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!

என்னைப்பற்றி சொல்கிறேன்:
பெயர்: ? (அதான் தலைப்புலயே சொல்லிடேனே!!!!!!)

ஊர்: திருச்சி
பள்ளி: தூய வளனார் மேல் நிலைப்பள்ளி
இளங்கலை: பொறியியல்
தற்போதய பணி: கணினி மேற்பார்வையளர்
விருப்பம்: இசை மட்டும் இருந்தால் போதும்

எனது குடும்பம் பற்றி சொல்கிறேன்:

அம்மா, அப்பா, அத்தை, தாத்தா மற்றும் பாட்டி அப்புறம் நான், எனது இரண்டு அக்கா, எனக்கு கீழ் ஒரு இரட்டயர்கள். இது ஒரு ஆசிரியர் குடும்பம். ஏனென்றால் வழி வழியாக தாத்தாவிலிருந்து அப்பா, அத்தை, இப்பொழுது இரன்டு அக்கா வரை எல்லாருமே ஆசிரியர்களே!!!!
எங்க குடும்பத்துல "அத்தை"ய பற்றி சொல்லியே ஆகனும். அந்த காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அவங்க தலைமைலதான் இயங்கிகிட்டிருக்குனு சொன்னா அது மிகையாகாது. அது ஏன்னு கேட்டா அது அப்படி தான்! ஒரு பயம் கலந்த மரியதைனு சொல்லலாம்.

என் இசை குரு:

என்னோட தாத்தா தான் என் இசை குரு. இவரிடம் இருந்துதான் ச ரி க ம ப த நி ஸ கற்றுக்கொண்டேன். அன்று அவர் கற்று கொடுத்த கலை இன்று வரை என் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கீபோர்டில் கை வைக்கும் போதும் மானசீகமாக நினைவு கூறுகிறேன். நாங்க எல்லாம் வளர்ற வரைக்கும் அப்பா கண்டிப்பாதான் இருந்தார். இப்பல்லாம் அப்படி இல்ல. ஒரு நண்பனை போல பழகிட்டு வரார். அவரும் என்ன பண்ணுவார் பாவம், தன்னுடைய ஓய்வை எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்.

பள்ளி படிப்பு:

இத பத்தி சொல்லும்பொழுதே ஒரு ஆனந்தம் தான். முதல் வகுப்பிலிருந்து 5 ம் வகுப்பு வரை ஒரு நடு நிலைப்பள்ளியில் பயின்றேன். அப்பொழுது பிரபு என்ற நண்பன் என் வாழ்வில் மறக்க முடியாதவன். குமரன், பாபுஜி, பாலாஜி, ஜாகிர், பொன்னி, விஜி. இன்று வரை இவர்கள் அனைவரிடமும் தொடர்பு உள்ளது. ஆனால் பிரபுவைத் தவிர!!!!!! (எங்க டா இருக்க நீ?)

அப்புறமா ஆறாவது படிப்பிற்கு தூய வளனார் மேல் நிலைப்பள்ளிக்கு நுழைவுத்தேர்வு எழுதி எங்க அப்பா அவர் வேலை பார்க்கிற பள்ளியிலயே சேர்த்து விட்டுடாரு. என் சந்தோசத்தை எல்லாம் அழிச்சிட்டாரு. எந்த வாத்தியாரா இருந்தாலும் சரி "டேய் நீ லியோ பையன் தான இரு உங்க அப்பன்ட சொல்ரேன் பாரு"னு ஒரே மிரட்டல்கள். எனக்கா ஒரே கடுப்பு அவர் மேல!!! செமயா திட்டுவேன் அவர. (அப்பா உங்கள ரொம்ப திட்டிடேன் மன்னிச்சுடுங்க).

இந்த மாதிரியான மிரட்டல்கள் தொடந்தது எட்டாவது வரை. அப்புறம் தான் வந்து சேர்ந்தானுங்க இன்னொரு விஜி, பாலாஜி, ஜெப்ரி, வினோத், மணிவேல், சீனிவாசன். நாங்க அடிக்காத கூத்து இல்ல, திருடாத திருட்டு இல்ல. லைப்ரரில, கேண்டீன்ல, வெளி கடைகள்லனு ஏகப்பட்ட திருட்டுகள். படிப்பு அப்பல்லாம் சுமார்தான். அப்படியே தொடர்ந்தது ஒன்பதாவது வரை இந்த சேட்டைகள் எல்லாம். அடுத்த வருடத்தை பற்றி தொடரும் பகிர்தலில் பார்ப்போமா?