Tuesday, March 25, 2008

வாழ்க்கையை மாற்றிய 10,11,12 !!!!!!!!!

அப்படியே ஊர சுத்தி வந்துட்டு இருந்த காலத்துக்கப்புறம் வந்தது பத்தாவது வகுப்பு. என் இன்னொரு அத்தை வீட்டிற்கு படிப்பதற்காக ஒன்பதாவது வகுப்பு விடுமுறை நாட்களிலேயே அனுப்பப்பட்டேன் . ஒரு மாதிரி வேண்டா வெறுப்பாதான் போனேன். கணிதமும், அறிவியலும் சொல்லிகொடுக்கப்பட்டன. எனக்கு அப்பதான் இதுதான் கணிதம்னு அப்பதான் தெரிந்தது. நிறைய அடிகள் மற்றும் கொட்டுகள் வாங்கி ஓரளவு கற்றுக்கொண்டிருந்தேன். அறிவியல் புத்தகம் எல்லாம் தண்ணி பட்ட பாடு எனக்கு. பின்ன முதல் அட்டைல இருந்து கடைசி அட்டை வரைக்கும் படிச்சா?

படிப்படியா பத்துல இருந்து முன்னேறி 5, 4, 3, 2, கடைசில 1 ம் வாங்கினேன். அப்பொழுது தெரிந்தது வாங்கிய கொட்டுகளின் இன்பம்!!! (அத்தைக்கு நன்றி). கடைசியா பொது தேர்வுல 460 மதிப்பெண்கள். இதுல அறிவியல்ல நூத்துக்கு நூறு வேற!!!!!! (அய்யோ அய்யோ). இந்த மாதிரி கலக்கிட்டுருந்தாலும் கலையையும் விடல. அதுலயும் கலக்குதான். அப்பதான் பள்ளில ரூபன்னா யார்னு தெரிய வந்தது. இதே கலக்கல்கள் தொடந்தது பன்னிரண்டாவது வரை!!!!!!! எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே மாதிரி" "எல்லா புகழும் என் அத்தை ஒருவருக்கே" என்று சொன்னால் அது மிகை ஆகுமா? ஆகாதா நீங்களே சொல்லுங்க?

இதே கலக்கல்கள் தொடரும்னு நினைச்சுட்டுதான் கல்லூரி படிப்புக்கு போனேன். ஆனால் அங்கயும் கலையிலதான் ஜெயிக்க முடிந்தது. பரவாயில்லை ரகம்னு சொல்லலாம்னு வச்சுக்கோங்களேன்.

0 comments: