Thursday, March 20, 2008

ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!


ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!

என்னைப்பற்றி சொல்கிறேன்:
பெயர்: ? (அதான் தலைப்புலயே சொல்லிடேனே!!!!!!)

ஊர்: திருச்சி
பள்ளி: தூய வளனார் மேல் நிலைப்பள்ளி
இளங்கலை: பொறியியல்
தற்போதய பணி: கணினி மேற்பார்வையளர்
விருப்பம்: இசை மட்டும் இருந்தால் போதும்

எனது குடும்பம் பற்றி சொல்கிறேன்:

அம்மா, அப்பா, அத்தை, தாத்தா மற்றும் பாட்டி அப்புறம் நான், எனது இரண்டு அக்கா, எனக்கு கீழ் ஒரு இரட்டயர்கள். இது ஒரு ஆசிரியர் குடும்பம். ஏனென்றால் வழி வழியாக தாத்தாவிலிருந்து அப்பா, அத்தை, இப்பொழுது இரன்டு அக்கா வரை எல்லாருமே ஆசிரியர்களே!!!!
எங்க குடும்பத்துல "அத்தை"ய பற்றி சொல்லியே ஆகனும். அந்த காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அவங்க தலைமைலதான் இயங்கிகிட்டிருக்குனு சொன்னா அது மிகையாகாது. அது ஏன்னு கேட்டா அது அப்படி தான்! ஒரு பயம் கலந்த மரியதைனு சொல்லலாம்.

என் இசை குரு:

என்னோட தாத்தா தான் என் இசை குரு. இவரிடம் இருந்துதான் ச ரி க ம ப த நி ஸ கற்றுக்கொண்டேன். அன்று அவர் கற்று கொடுத்த கலை இன்று வரை என் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கீபோர்டில் கை வைக்கும் போதும் மானசீகமாக நினைவு கூறுகிறேன். நாங்க எல்லாம் வளர்ற வரைக்கும் அப்பா கண்டிப்பாதான் இருந்தார். இப்பல்லாம் அப்படி இல்ல. ஒரு நண்பனை போல பழகிட்டு வரார். அவரும் என்ன பண்ணுவார் பாவம், தன்னுடைய ஓய்வை எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்.

பள்ளி படிப்பு:

இத பத்தி சொல்லும்பொழுதே ஒரு ஆனந்தம் தான். முதல் வகுப்பிலிருந்து 5 ம் வகுப்பு வரை ஒரு நடு நிலைப்பள்ளியில் பயின்றேன். அப்பொழுது பிரபு என்ற நண்பன் என் வாழ்வில் மறக்க முடியாதவன். குமரன், பாபுஜி, பாலாஜி, ஜாகிர், பொன்னி, விஜி. இன்று வரை இவர்கள் அனைவரிடமும் தொடர்பு உள்ளது. ஆனால் பிரபுவைத் தவிர!!!!!! (எங்க டா இருக்க நீ?)

அப்புறமா ஆறாவது படிப்பிற்கு தூய வளனார் மேல் நிலைப்பள்ளிக்கு நுழைவுத்தேர்வு எழுதி எங்க அப்பா அவர் வேலை பார்க்கிற பள்ளியிலயே சேர்த்து விட்டுடாரு. என் சந்தோசத்தை எல்லாம் அழிச்சிட்டாரு. எந்த வாத்தியாரா இருந்தாலும் சரி "டேய் நீ லியோ பையன் தான இரு உங்க அப்பன்ட சொல்ரேன் பாரு"னு ஒரே மிரட்டல்கள். எனக்கா ஒரே கடுப்பு அவர் மேல!!! செமயா திட்டுவேன் அவர. (அப்பா உங்கள ரொம்ப திட்டிடேன் மன்னிச்சுடுங்க).

இந்த மாதிரியான மிரட்டல்கள் தொடந்தது எட்டாவது வரை. அப்புறம் தான் வந்து சேர்ந்தானுங்க இன்னொரு விஜி, பாலாஜி, ஜெப்ரி, வினோத், மணிவேல், சீனிவாசன். நாங்க அடிக்காத கூத்து இல்ல, திருடாத திருட்டு இல்ல. லைப்ரரில, கேண்டீன்ல, வெளி கடைகள்லனு ஏகப்பட்ட திருட்டுகள். படிப்பு அப்பல்லாம் சுமார்தான். அப்படியே தொடர்ந்தது ஒன்பதாவது வரை இந்த சேட்டைகள் எல்லாம். அடுத்த வருடத்தை பற்றி தொடரும் பகிர்தலில் பார்ப்போமா?

2 comments:

சிவசுப்பிரமணியன் said...

கலக்கல் டா மச்சான்

ரூபஸ் said...

அறிவுகெட்டவனே கேள்விக்குறி எது? ஆச்சர்யகுறி எதுன்னு உனக்கு தெரியாதா?

கேள்விக்குறின்னு போட்டுட்டு ஆச்சர்யகுறிய போட்டுருக்க..

நல்லாயிருக்கு ரூபன். தொடர்ந்து எழுது..