Monday, March 31, 2008

ராஜாங்கம்!

வேற யாருங்க நம்ம இளையராஜா சார பத்திதான் பேசபோறோம்.எல்லோருக்கும் தெரிந்த இசை மேதைங்க.அவரை பற்றி ஒரு சில தெரியாத விவரங்கள பத்தி கொஞ்சம் பார்ப்போம்.இவர் பிறந்த ஊர் மதுரைக்கு பக்கத்துல "பன்னபுரம்"ங்குற இடம்.இவரோட குரு பாவலர் வரதராஜன்.ரொம்ப சின்ன வயசுலயே இசை மேல அதீத வெறியரா இருந்துருக்கார்.1969 ல தாங்க மெட்ராஸ்(இப்ப சென்னை) வந்துருக்கார்.அப்புறம் "தன்ராஜ்"என்ற ஆசிரியரிடம் பியானோவும்,கிட்டாரும் மேற்கத்திய இசையயும் கற்றார்.

இசை நுட்ப அறிவுக்காக லண்டன் சென்று ட்ரினிடி பல்கலைகழகத்துல சேர்ந்து அதனை முழுதாக கற்றுத் தேர்ந்தார்முதல் படமான " அன்னக்கிளி " 1976 ல வெளி வந்து சக்க போடு போட்டுருக்குங்க.இதுல விசேஷம் என்னனா? முதன் முதலா ஒரு இசையமைப்பாளருக்கு விளம்பரபலகை வைத்த பெருமை இவரையே சாரும்.இந்த படத்துல இன்னொரு சுவாரசியம் என்னனா இவரு தன்னோட முதல் கம்போஸிங்க(அதாங்க இசை கோர்ப்பு) ஆரம்பிக்கிறப்பவே பவர் கட்.எல்லாரும் நினைச்சாங்க எங்க இவன் தேறப் போறான்னு.அன்னக்கி அவர் இத ஒரு தடங்கல்னு நினைச்சுருந்தா???????

அப்புறம் வரிசையா பதினாறு வயதினிலே,பொண்ணு ஊருக்கு புதுசு,கண்ணன் ஒரு கைக்குழந்தை, நெற்றிக்கண், நிழல்கள்,மூடுபனி,ஆறிலிருந்து அறுபதுவரை, நெஞ்சத்தை கிள்ளாதே, கோழிக்கூவுது,இப்படினு சொல்லிட்டே போகலாம். நானூறாவது படமா " நாயகன்",ஐநூறாவது படமா " அஞ்சலி" அமைந்தது. திரை இசைய தவிர " ஆல்பமும்" பன்னிருக்காரு. இத தவிர கர்நாடக சங்கீதத்துல " பஞ்சமுகி" எனும் ராகத்தினை கண்டுபிடிச்சுருக்கார். இசைத்துறைல நுழைந்து 20 வருடத்துல 500 படங்கள தாண்டிட்டார்.

பட்டி தொட்டியெல்லாம் இவரோட இசை சென்றடைய காரணம் மனதை வருடும் மெல்லிசையும், நாட்டுப்புற இசைய்யும் தான். சமீபத்துல கூட வந்த " திருவாசகம் " பற்றி நான் சொல்லிதான் தெரியனுமா? இந்த காலத்துலதான் இசைக்கோர்ப்பு வேலைகள் எல்லாம் ரொம்ப சுலபமா பண்றாங்க.இன்னும் தெளிவா சொன்னா தனித்தனி ட்ராக் காக முடிச்சிடறாங்க.அந்த காலத்துல அப்படி கிடயாது."இளைய நிலா பொழிகிறதே"ங்குற பாடல 17 முறை எடுத்துருக்கார்."காதலுக்கு மரியாதை" படத்தின் அத்தனை பாடல்களும் ஒரே நாள் ல முடிக்கப்பட்டது.

நடிகர் ராமராஜன்னு ஒருத்தர் இருந்தார் இல்லையா? அவருடைய படங்கள் எல்லாம் ஓடியதற்கு நம்ம ராஜா சார் தான் காரணம். நடிகர் மைக் மோகன் தொடர்ந்து 25 வெள்ளி விழா படங்கள கொடுத்துருக்கார்னா அதுக்கும் நம்மதான் காரணம்.இன்னும் நிறைய சொல்லலாம்."பூவே செம்பூவே","கன்ணே கலைமானே","என் வானிலே" இதெல்லாம் கேட்டுட்டு அழாம இருக்க முடியுமா? வாழ்க ராஜா! தொடரட்டும் அவரின் இசை பயணம்.

4 comments:

ரூபஸ் said...

இசைஞானியைப்பற்றி சுருக்கமாகவும் , தெளிவாகவும் எழுதியிருக்கிறாய்..

வாழ்த்துக்கள்..

Prabu said...

இசை ராஜா...!!! - ராஜாங்கத்தின் தெரியாத விஷயங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரூபன். தொடரட்டும் உங்கள் பகிர்தல்.

-த.பிரபு குமரன்

Prabu said...

இசை ராஜா...!!! - ராஜாங்கத்தின் தெரியாத விஷயங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரூபன். தொடரட்டும் உங்கள் பகிர்தல்.

-த.பிரபு குமரன்

சிவசுப்பிரமணியன் said...

நன்பா.. சின்னதா ஒரு கோடு போடுடான்னு சொன்னேன்.. பின்னி எடுக்குற...