Tuesday, March 25, 2008

திருச்சிய பத்தி கொஞ்சம் பார்ப்போமா?









திருச்சி ரொம்ப பெரிய ஊர் இல்லைனாலும் கொஞ்சம் பெரிய ஊர் தான்.சிறப்பான சில இடங்கள்னு பார்த்தா புனித லூர்து அன்னை ஆலயம்,மலைக்கோட்டைஇவற்றை ஒட்டிய ஒரு தர்கா,அப்புறம் வெளில வந்து பாத்தா பாரத மிகு மின் நிலையம், முக்கொம்பு, கல்லணை, மலைக்கோவில், துப்பாக்கி தொழிற்சாலை. இந்த சிறப்பான இடத்துல ஒரு மத நல்லிணக்கமும் ஒளிஞ்சிருக்கு.அது என்ன தெரியுமா? பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரே நேரத்தில் மலைக்கோட்டை,லூர்தன்னை ஆலயம்,தர்கா மூன்றிலும் மணி ஒலிக்கும்.இப்ப சொல்லுங்க திருச்சி சிறப்பா இல்லையா?

சுற்றுலா தலம் கூட இருக்குங்க:

திருச்சில இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் இருக்கு.ஒன்னு "சத்திரம் பேருந்து நிலையம்".இன்னொன்று " மத்திய பேருந்து நிலையம் ".இதுல முதலாவதா "முக்கொம்பு" பத்தி பார்ப்பொம்.சத்திரத்திலிருந்து ஒரு 15 கி.மீ.தொலைவில் இருக்குது இந்த இடம்.ஒரு காலத்துல பள்ளிகள் ல சுற்றுலா கூட்டிட்டு வருவாங்க.இப்ப காதலர்கள் பூங்கா ஆனது கொஞ்சம் உறுத்தலான உண்மை.அடுத்தது கல்லணை.இதுவும் முக்கொம்புவை ஒட்டிய ஒரு தலமாகும்.கரிகால மன்னர் இதனை கட்டினார் என்ற வரலாற்று செய்தியும் உண்டு.புளியஞ்சோலைனு ஒரு இடம் இருக்குங்க.இது திருச்சில இருந்து சுமார் 50 கி.மீ.தொலைவுல இருக்கு.

பார்க்க வேண்டிய இடங்கள்:

மேற்கண்ட கோயில்கள் எல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள் தான்.இது தவிர பூண்டி மாதா பேராலயம், திருவரங்கம், மலைக்கோவில், தெப்பக்குளம் இன்னும் நிறைய இருக்கு.


கல்லூரிகள்:

திருச்சில முக்கியமான கல்லூரி யாக " புனித வளனார் தன்னாட்சி "கல்லூரிய சொல்லலாம்.ஏன்னா?திரு.மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரி இது.இவர் தன்னுடைய இளங்கலையை இங்குதான் பயின்றார்(இயற்பியல்).இது மட்டும் அல்ல மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இங்குதான் இளங்கலையை முடித்தார். இது தவிர நிறைய பொறியாளர்களையும், மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமை இக்கல்லூரியையே சேரும்.



2 comments:

ரூபஸ் said...

ம். கலக்கு. ஆனா அந்த பெங்களூர் ஐயங்காரு பேக்கிரிய பத்தி சொல்லவே இல்லையே..

நையாண்டி நைனா said...

என்னா...இது...இப்படி சுருக்குன்னு..முடிச்சிட்டீங்க......